ஐபிஎல் போட்டிக்கு 3 வீரர்கள் ஒப்பந்தம் : ஆமதாபாத்-லக்னோ அணிகள் அறிவிப்பு

By 
3 players contracted for IPL match Ahmedabad-Lucknow teams announced

8 அணிகளுடன் களம் இறங்கிய ஐபிஎல் போட்டி, தற்போது 10 அணிகளாக மாற்றம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு அணி நிர்வாகமும், வீரர்களை பல கோடி ரூபாய் பேசி ஏலத்தில் தேர்வு செய்கின்றனர்.

ஆமதாபாத்-லக்னோ :

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன. 

இதன்படி, ஆமதாபாத் அணி இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (ரூ.15 கோடி), 

கே.எல்.ராகுல் :

இந்திய பேட்ஸ்மேன் சுப்மான் கில் (ரூ.8 கோடி) ஆகியோரையும், லக்னோ அணி நிர்வாகம் இந்தியாவின் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), 

இந்திய உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளன.
*

Share this story