7-ந்தேதி, ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக வீரர் தேர்வு

By 
asia7

* கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா) 4-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஷாங்சூயை எதிர்கொண்டார். இதில் கவூப் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

* 23 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை குவைத்தில் நடக்கிறது.

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் கடந்த 2 தினங்களாக பாட்டி யாலா, புனே, குஜராத்தில் நடந்தது.

தமிழக வீரர் பி.பெபிட் இந்த தேர்வு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிய போட்டிக்கு தேர்வு பெற்றார்.

கன்னியாகுமரியை சேர்ந்த அவர் சேபர் தனிபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதனால் பெபிட் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.

Share this story