பேட்மிண்டன் போட்டி : 43 ஆண்டுகளுக்கு பிறகு, கோப்பையை வெல்கிறது இந்தியா..
 

By 
thomas

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. 

முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் லீ ஜியாவிடம் 23-21, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

ஸ்ரீ காந்த் :
 
2-வது போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் கோஸ்ஸே ஃபே மற்றும் நூர் இசுதீனை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேஷியாவின் நாங் டிசே யோங்கை 21-11, 21-17 என்ற செட்களில் விழ்த்தி, இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.

ஜெயிப்பது நிஜம் :

4-வது ஆட்டத்தில் இந்திய ஜோடி கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யியை எதிர்த்து விளையாடிது. 

இதில், ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஜோடி 21-19, 21-17 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.

எனினும் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார்.

இதன் மூலம் காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா, அரையிறுதியில் நுழைந்ததுடன் 43 ஆண்டிற்கு பிறகு, தனது முதல் தாமஸ் கோப்பை பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
*

Share this story