பேட்மிண்டன் தொடர் : இந்திய இளம்வீரர் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி..

By 
lakshyasen

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ் பிரனாயுடன் மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென், 21-9, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் லக்சயா சென் ஜப்பான் வீரர் கோடை நரோகாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென் 17-21, 12-21 என்ற செட் கணக்கில் நரோகாவிடம் தோல்வியைத் தழுவினார்.

Share this story