குத்துச்சண்டை தர்பார் : பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்..
 

By 
common6

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. 

இந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. 

7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில், ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

குத்துச்சண்டை போட்டியில், இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் உண்டு. 

இதன் மூலம், ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
*

Share this story