செஸ் ஒலிம்பியாட் தர்பார் : இறுதியாய் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணி பட்டியல்..
 

By 
chesso10

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. 

அந்த அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர் சிந்தாரோவ், ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் ஜஹோங்கிர் வாகிடோவ் ஆகியோர் தங்கம் வென்றனர். 

2-வது இடம் பிடித்த அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 

அந்த அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 

அந்த அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 

வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களையும், தம்பி நினைவுப் பரிசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் மகளிர் பிரிவு உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். 

ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர். 

இந்திய மகளிர் 'ஏ' அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர். 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
*

Share this story