சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு, பிரதமர் மோடி- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

padminton

தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. 

இதில், நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தேசமே மகிழ்ச்சி :

இந்நிலையில், தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால், ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது! 

நம் திறமையான குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். 

இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்' என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் :

14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி, இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
*

 

Share this story