எனது ஆட்டம் எப்போது ஓய்வு பெறும் தெரியுமா? : கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஸ்பீச்

By 
ronaldo

'கால்பந்து விளையாட விருப்பமில்லை என்றால், எனது ஓய்வு முடிவை நானே அறிவிப்பேன்' என ஜாம்பவான் ரொனால்டோ கூறியுள்ளார்.

உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்து, பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், 2022 பிபா உலகக் கோப்பையின் தகுதிச்சுற்றில், பிளே ஆப் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி மாசிடோனியாவை எதிர்கொள்கிறது. இத்தருணத்தில் ரொனால்டோ தனது ஓய்வு முடிவு குறித்து திட்டவட்டமாக கூறியதாவது :

'என்னிடமும் இதே கேள்வியை அடிக்கடி கேட்கத் தொடங்கி விட்டார்கள். என் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது நான்தான். வேறு யாரும் இல்லை. 

எனக்கு அதிகமாக விளையாட வேண்டும் என்று தோன்றினால், நான் விளையாடுவேன். கால்பந்து விளையாட விருப்பமில்லை என்றால், எனது ஓய்வு முடிவை நானே அறிவிப்பேன். 

கால நிலையை பொறுத்து எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்' என்றார்.

Share this story