ரோகித் சர்மா எடுத்த முடிவு பற்றி, கவுதம் கம்பீர் கடும் சாடல்..

By 
gowtham

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரிஷப் பண்டை அணியில் சேர்க்காத நிலையில் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது:-

டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில் தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவலை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள்.

எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்கு தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்' என கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

Share this story