'நான் சட்டசபைக்கு போறேன்' : கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி செம குஷி..

By 
rivavaa

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா தேர்தலில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் களமிறங்கினார்.

இந்நிலையில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் ஜடேஜா மனைவி ரிவவாவுக்கும் இடையே தொடக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் ரிவபா அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார்.

13 சுற்றுகள் முடிவில் ரிவபா 67 ஆயிரத்து 54 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பிற கட்சி வேட்பாளர்களை விட 39 ஆயிரத்து 268 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான ஜடேஜா மனைவி ரிவபாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

Share this story