ஐபிஎல் டுடே : 37 ரன் வித்தியாசத்தில், ராஜஸ்தானை தெறிக்கவிட்டது குஜராத்.. எப்டின்னா..

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று இரவு 24-வது லீக் போட்டி, மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில், மேத்யூ வேட் (ரன் அவுட்), 12 ரன்களிலும் விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பாண்ட்யா-அபினவ் :
பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களிலில் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் மில்லர், ஹர்திக் பாண்ட்யா இருவரும் பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்கவிட்டனர் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது .
சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 87 ரன்களும், டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
பட்லர் அரைசதம் :
இதனைத் தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .
தொடக்கத்தில் விக்கெட் இழந்தாலும், ஜோஸ் பட்லர் அதிரடி குறையவில்லை .
குஜராத் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு வந்த வீர்ரகள் நிலைத்து நின்று ஆடாததால், ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது .
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது .
இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .
*