ஐபிஎல் விக்கெட் : ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி சாதனை..

By 
ipl36

15-வது ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 69 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம், ஒரு இன்னிங்சின் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20-வது ஓவரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரஸ்ஸல் படைத்தார்.

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் கடைசி ஓவரில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story