700 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான, தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டி..

By 
pad1

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம், கோவை பேட்மிண்டன் சங்கம், டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை சார்பில், 

கோவையை அடுத்த வீரியம்பாளையத்தில் தேசிய அளவிலான இறகுபந்துப் போட்டி நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 700 பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். 

10 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பழனியை சேர்ந்த எஸ்.சரண், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த மிருதுளா ஆகியோரும்,

13 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த சாய் புஷ்கர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதே மாநிலத்தை சேர்ந்த கவுரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். 

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கோவையை சேர்ந்த சச்சின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோவையை சேர்ந்த கிருத்யா ஆகியோரும், 

17 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்ஷன் வம்ஷி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பிரீத்தி ராவ் ஆகியோரும் வென்றனர். 

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த ஹப்ரிஷ் தண்டபாணி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் திருப்பூரை சேர்ந்த ரிது வர்ஷினி ஆகியோரும், 

19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த பரத் சஞ்சய், மாதவன், பெண்கள் இரட்டையர் பிரிவில் ரிது வர்ஷினி, வேதா ஆகியோரும் வென்றனர். 

அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழை தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க செயலாளர் அருணாசலம், குரு மித்ரேஷிவா ஆகியோர் வழங்கினர்.
*

Share this story