டி20 உலகக்கோப்பை : இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் : டிக்கெட் விற்று தீர்ந்தன; மீண்டும் டிக்கெட் கிடைக்குமா?

 

By 
indp

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதேபோல் வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள், இந்தியா மற்றும் குரூப் A-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இருப்பினும் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம்.
 

Share this story