சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 5-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி..

By 
eri2

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

இதில் இந்தியாவின்டி.கேஷ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் மோதிய ஆட்டம் 30-வது காய் நகர்த்தலின் போதுடிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் லெவோன் அரோனியன், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதியஆட்டமும் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி தனது 5-வது சுற்றில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு முழுமையாக ஒரு புள்ளி கிடைத்தது. 

ஹங்கேரியின் சனான் சுகிரோவ், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா மோதிய ஆட்டம் 42-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

6 சுற்றுகளின் முடிவில் டி.கேஷ் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முறையே 2 முதல் 4-வது இடம் வகிக்கின்றனர். 

அமெரிக்காவின் லெவோன் அரோனியன் 3 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். பர்ஹாம் மக்சூட்லூ, சனான் சுகிரோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளனர். அலெக்சாண்டர் ப்ரெட்கே 1.5 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
 

Share this story