பேட்மிண்டன் வேர்ல்டு : இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கலக்கல்; அஸ்வினி கலக்கம்..
ஆண்டு இறுதியில் அரங்கேறும் கவுரவமிக்க உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டி, இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இன்றுமுதல் 5-ந்தேதி வரை நடக்கிறது.
மொத்தம் ரூ.11¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில், உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
நம்பர் ஒன் வீரர் :
ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறார்.
ஸ்ரீகாந்த் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) 21-14, 21-16 எனும் செட் கணக்கில் வீழ்த்தினார். அவர் அடுத்த ஆட்டத்தில் குன்லாவுத் விதித்சரனை(தாய்லாந்து) எதிர்கொள்ள உள்ளார்.
தோல்வி :
மறுமுனையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை ஜப்பானின் நமி மட்சுயாமா - சிஹாரு ஷிதா ஜோடியிடம் 14-21, 18-21 எனும் செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
*