சென்னையில் கூடைப்பந்துப் போட்டி : தமிழக பெண்கள் அணி முதல் தோல்வி..
71-வது தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், தமிழக அணி 54-93 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கானாவிடம் பணிந்தது.
தெலுங்கானா அணி தொடர்ச்சியாக, 3-வது வெற்றியை பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 66-40 என்ற புள்ளி கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.
இதேபோல், தமிழக அணி 91-40 என்ற புள்ளிக் கணக்கில் ஆந்திராவை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை தன்வசப்படுத்தியது.
தமிழக அணியில் அரவிந்த் குமார் 17 புள்ளியும், கார்த்திக் 15 புள்ளியும், லோகேஸ்வரன் 12 புள்ளியும் சேர்த்தனர்.