ரிஷப் பண்ட் பற்றி, 'கோச்சர்' டிராவிட் கருத்து
இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட் தொடர்பாக கூறியதாவது :
ரிஷப்பண்ட் நேர்மறையாக விளையாடுகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் விளையாடுகிறார். அது அவருக்கு கொஞ்சம் வெற்றியை கொடுத்தது.
ஆனால், நிச்சயமாக அவருடன் சில உரையாடல்களை செய்யப் போகிறோம். அவரது ஷாட் தேர்வு குறித்து விவாதிக்கப் போகிறோம்.
நேர்மறை :
ரிஷப்பண்ட் ஒரு ஆக்ரோஷமான, நேர்மறையான வீரராக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
ஆனால், சில சமயங்களில் அதை செய்வதற்கான நேரம் மற்றும் சூழ்நிலையை தேர்ந்தெடுப்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கும்.
அதுபற்றி அவருடன் பேசுவோம். ரிஷப்பண்ட் விளையாட்டின் போக்கை மிக விரைவில் மாற்றக்கூடியவர்.
இயற்கையாகவே இருக்கும் அதை, அவரிடமிருந்து பறித்து அவரை மிகவும் வித்தியாசமானதாக நீங்கள் ஆக்க மாட்டீர்கள். அவர் கற்றுக்கொள்கிறார். அவர் தொடர்ந்து முன்னேறி, மேலும் சிறப்பாக வருவார்.
சதங்கள் :
முதல் இன்னிங்சில் நாங்கள் 60 முதல் 70 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அது போட்டியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். நல்ல தொடக்கத்தை பெற்ற வீரர்கள் சிலர், அதை சதங்களாக மாற்றி இருக்கலாம்.
50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் முன்னிலை பெற்றிருந்தால், எங்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்' என்றார்.
டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வருகிற 11-ந் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
*