டுவிட்டரில் சர்ச்சை பதிவு : பவுலருக்கு அபராதம்..8 போட்டியில் விளையாடத் தடை..
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான ஆலி ராபின்சன். இவர், தனது இளம் வயதில் பெண்களை இழிவுப்படுத்தியும், இனவெறியை தூண்டும் வகையிலும் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது.
ஒழுங்கு நடவடிக்கை :
இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. இதன் முடிவில், அவருக்கு ரூ.3¼ லட்சம் அபராதமும், 8 போட்டிகளில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதில், 3 போட்டி தடையை அவர் உடனடியாக அனுபவிக்க வேண்டும். எஞ்சிய 5 ஆட்ட தடை என்பது இரு ஆண்டுகளில் அவரது நடத்தை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
அடுத்த மாதம் 4-ந்தேதி :
ஏற்கனவே, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. அத்துடன் சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்கான இரண்டு 20 ஓவர் போட்டிகளில் ஆடவில்லை.
இதனால், 3 ஆட்டம் தடை முடிந்து விட்டது. எனவே அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியும்