அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் : கோலி வேண்டுகோள்
 

By 
Everyone should support Goalie plea

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. முதலில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

மேலும், 3 பேருக்கு கொரோனா :

அதைத்தொடர்ந்து நேற்று 3 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதில், 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்தவர்கள். மற்றொரு வீரர் ஓட்டலில் தங்கி இருந்தவர் ஆவார்.

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த மேலும், 3 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 பேரும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அல்ல. ஒலிம்பிக் கிராமத்தோடு தொடர்புடையவர்கள். ஒரு பத்திரிகையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆதரவு :

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 95-க்கும் மேற்பட்ட முதல் குழு ஜப்பான் சென்றடைந்தது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
*

Share this story