கிரிக்கெட் பரபரப்பு: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் ஹர்திக் பாண்ட்யா..?
![mumbai2](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/7f4c14dcd5736e10d83e66971bcf08b9.jpg)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா..
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பிரியாவிடை அளித்துள்ளது மும்பை அணி நிர்வாகம். அவர் இதே அணியில் தொடர்வாரா? இல்லை வேறு அணிக்கு செல்வாரா என கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, மும்பை அணியின் புதிய கேப்டன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என புதிய தகவல் வெளியாகிறது. கணுக்கால் காயம் காரணமாக அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.