ஹாக்கி் போட்டியில் இன்று : நியூசிலாந்தை தெறிக்கவிட்டது இந்தியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆதிக்கம் :
பின்னர், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இதனால், முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்மன்ப்ரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால், இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
வெற்றி :
3-வது காலிறுதி ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
ஆனால், நியூசிலாந்து அடுத்த நிமிடத்தில் (27-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.
4-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.