ஹாக்கி டுடே : இந்திய ஆண்கள் அணியின் எழுச்சி, இறுதியில் வீழ்ச்சியானது.
பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியில், அடுத்தடுத்த நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து அசத்தினர். பின்னர், நிகழ்ந்த கள நிகழ்வு வருமாறு :
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின.
ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால், 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
நான்காவது கால் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்தது.
இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில், இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.