ஆப்கானிஸ்தானை அலறவிட்டு, அரைஇறுதிக்கு இந்தியா முன்னேற்றம் : ஆடுகள விவரம்..
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பரபரப்பாக நடந்த போட்டியில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
259 ரன்கள் :
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ரன்கள் குவித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார். சுலைமான் சபி 73 ரன்னுடன் அவுட்டானார்.
இந்தியா சார்பில் ராஜ்வர்தன், கௌஷல் தாம்பே, விக்கி மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றிப்பாதை :
இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங் - ரகுவன்ஷி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்னூர் சிங் 65 ரன்களும், ரகுவன்ஷி 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின், ஜோடி சேர்ந்த ராஜ் பாவா, கௌஷல் தாம்பே ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
4 விக்கெட் :
இறுதியில், இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
*