24-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல் : கவுதம் காம்பீர் கருத்து
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
89 ரன்கள் :
இரு அணிகளும் அக்டோபர் 24-ந்தேதி முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரு அணிகளும் மோதுவதால், அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடைசியாக இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில், இந்தியா 89 ரன்னில் வெற்றிபெற்றது.
3 முறை தோல்வி :
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணி தொடர்பாக காம்பீர் கூறியதாவது :
'தற்போதுள்ள நிலைமையில் இந்திய அணி மிகவும் பலம் பெற்று திகழ்கிறது.
இதனால், பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது. உலகக்கோப்பை போட்டியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் 5 முறை தோற்றுள்ளது.
இந்த நெருக்கடியில், அந்த அணி விளையாட வேண்டிய நிலை இருக்கிறது’ என்றார்.