ஐபிஎல் அதிரடி : தகுதிச்சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் மோதல்..
 

By 
IPL action Chennai-Delhi clash in qualifying round ..

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லீக் சுற்று நிறைவடைந்தது. 

பிளே ஆஃப் :

லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு, முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன. 

இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். 

தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

15-ந்தேதி :

நாளை மறுநாள் (11-ம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. 

இதில், தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13-ம் தேதி மோதும். இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

Share this story