ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

By 
IPL run For the play-off round, there will be a tough match between 4 teams.

ஐபிஎல் 2021 கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணி வெற்றி பெற்றதால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

சென்னை :

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (9 வெற்றி), டெல்லி கேப்பிடல்ஸ் (8 வெற்றி) அணிகள் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன. ஆர்.சி.பி. 7 வெற்றிகள் மூலம் 3-வது இடத்தில் உள்ளது. இன்றும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. 

ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இல்லையென்றால் ரன்ரேட் முறையில் தகுதி பெறும்.

கொல்கத்தா-பஞ்சாப் :

4-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் 11 போட்டியில் விளையாடி 5 வெற்றியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11-ல் விளையாடி 4-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நாளை சென்னைக்கு எதிராக விளையாடுகிறது. 
இதில், தோல்வியடைந்தால் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். 

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ரன்-ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு உண்டு.

மும்பை இந்தியன்ஸ் :

கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

ஒன்றில் தோற்றால் கூட வாய்ப்பை இழக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. இரண்டில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்புள்ளது. 

மூன்றிலும் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும். இதனால், நான்கு அணிகள் இடையே ஒரு இடத்திற்கு கடும்போட்டி நிலவுகிறது.

Share this story