மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள் - மும்பைக்கு எதிராக கொல்கத்தா 157 ரன்கள் குவிப்பு..

By 
iplrain

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

17-வது ஐபிஎல் தொடர் ஆட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால், டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதை அடுத்து 16 ஓவர்களாக மேட்ச் குறைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே, ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம், 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என்ற விதிமுறைகளுடன் போட்டி தொடங்கியது.

பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சுனில் நரேனை தனது யார்க்கர் பந்துவீச்சில் போல்டக்கி பூஜ்ஜியத்தில் வெளியேற்றினார் பும்ரா. பிலிப் சால்ட் 6 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டானார்.

ஒன் டவுன் இறங்கிய வெங்கடேஷ் அய்யர் நம்பிக்கை அளித்தார். 42 ரன்கள் எடுத்து அவர் விக்கெட்டாக, நிதிஷ் ராணா 33 ரன்கள், ரஸல் 24 ரன்கள், ரிங்கு சிங் 20 ரன்கள் எடுத்தனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

 

Share this story