போட்டியில் இருந்து விலகுகிறேன் : 'டென்னிஸ் சூறாவளி' ஆஷ்லி பார்ட்டி அறிவிப்பு
உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட, இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று ஆஷ்லி பார்ட்டி கூறியுள்ளார்.
‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் இறுதிச் சுற்றுப் போட்டி, மெக்சிகோவில் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில், இருந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக விலகினார்.
கடைசியாக, 2019-ம் ஆண்டு நடந்த உலக டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான 25 வயது ஆஷ்லி பார்ட்டி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
‘உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட, இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் நான் கலந்து கொள்ளமாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
*