அசத்தலாக ஆடினார் மிதாலி ராஜ், ஆயினும் நழுவிப் போனது வெற்றி..எப்படியெனில்..

By 
Mithali Raj pulls off a stunning, but slipped win..how ..

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

பவுலிங் தேர்வு :

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா 10 ரன்னிலும், ஷபாலி 15 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து ஆடிய பூனம் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து நின்று ஆடினார்.  பொறுப்புடன் ஆடிய அவர் அரை சதம் கடந்தார். 

இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளது இது 13வது முறையாகும். அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

மிதாலி ராஜ் 72 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஹர்மன்பிரீத் (1), தீப்தி (30), பூஜா (15) தன்யா (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

அரை சதம் கடந்த மிதாலி ராஜ் :

இங்கிலாந்து சார்பில் எக்ளெஸ்டோன் 3 விக்கெட்டும், கேத்தரின், ஆன்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

202 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாரன் 16 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹீதர் நைட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.  

மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஸ்சிவெர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆட்ட நாயகி :

இறுதியில், இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேமி 87 ரன்களும், ஸ்சிவெர் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இதன்மூலம், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது டேமி பியூமெண்டுக்கு அளிக்கப்பட்டது.

Share this story