பாராலிம்பிக் போட்டி : பதக்கத்தை பறிக்கிறார், நம்ம பவினா..வெயிட்டிங்..
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில், 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.
அரையிறுதி :
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவினா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
பதக்கம் :
இதன்பின் நடந்த அரையிறுதிப் போட்டியில், சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பென் பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால், இந்தியாவுக்கான பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
*