பாராலிம்பிக் டுடே : தங்கம் வென்றார் கிருஷ்ணா : பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும்16-வது பாராலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் 54 வீரர்கள் கலந்துகொண்டு, 9 வித விளையாட்டுகளில் ஆடி வருகின்றனர்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த பாராலிம்பிக் போட்டியில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது. உலக நாடுகளும் நிறைவு நாள் பாராலிம்பிக்கை உற்று நோக்கி வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில், ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.
இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*