சென்னையில், கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி : 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..

By 
cw

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி சார்பில், மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ வினளயாட்டு போட்டிகள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம் , ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பால் பேட்மின்டன் போட்டிக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, 5000 கிடைக்கும்.

செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் முதல் 3 இடங்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கல்லூரிகள் வருகிற 10-ந்தேதிக்குள் 9840737407 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உயர்கல்வி இயக்குனர் அமுதா சுமன் தெரிவித்துள்ளார்.
 

Share this story