டென்னிஸ் களம் : மேலும் முன்னேறி, ஆஷ்லி பார்ட்டி அசத்தல்
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், அரையிறுதி ஆட்டம் ஒன்றில், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 7-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்தார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியும், கரோலினா பிளிஸ்கோவாவும் மோதுகின்றனர்.