டென்னிஸ் துள்ளல் : ஆஷ்லி பார்ட்டி அசத்தல், பார்போரா கிரெஜ்சிகோவா கலக்கல்

By 
Tennis Hopping Ashley Party Stunning, Barbora Krezzhikova Mix

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு :

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் காஸ்குட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

6-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெரேட்டினி (இத்தாலி), மெட்வடேவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி) ஆகியோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு :

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை (ரஷியா) விரட்டி 3-வது சுற்றை எட்டினார்.

சமீபத்தில், பிரெஞ்ச் ஓபனை வென்றவரான பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு) தன்னை எதிர்த்த ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து, 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் தொடர்ச்சியாக வென்ற 14-வது வெற்றி இதுவாகும்.

இதேபோல், கரோலினா முச்சோவா (செக் குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), செவஸ்தோவா (லாத்வியா), பாவ்லிசென்கோவா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

Share this story