டென்னிஸ் மின்னல்ஸ் : சானியா மிர்சா, ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சித் தோல்வி..

By 
Tennis Lightning Sania Mirza, Ashley Party shock shock ..

ஒலிம்பிக்கில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி :

இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

ஆஷ்லி பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

3-வது சுற்றில் :

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா- அங்கிதா ஜோடி உக்ரைன் நாட்டின் நடியா கிச்சனோக்- லியுட்மைலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில், சானியா ஜோடி முதல் செட்டில் அபாரமாக விளையாடியது. 

இதனால், 6-0 என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டில் உக்ரைன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய ஜோடியும் பதிலடி கொடுத்தது. 

இதனால், செட்-பிரேக் வரை 2-வது சென்று இறுதியில் உக்ரைன் ஜோடி 6(7)- 6(0) என கைப்பற்றியது. 3-வது செட்டிலும் 8-10 என சானியா ஜோடி தோல்வியை தழுவியது. 

இந்திய வீரர்கள் தோல்வி :

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. 

இதில், இந்திய வீரர்கள் தீபக்குமார், திவ்யான்ஷ் சிங்
பன்வார் பங்கேற்றனர்.  

இப்போட்டியில், முதல் 8 இடங்களை கைப்பற்றும் விரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். 

6 சுற்றுகளை கொண்ட தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் முறையே 102.9, 103.8, 103.7, 105.2, 103.8, 105.3 என மொத்தம் 624.7 புள்ளிகளை பெற்றார். 

இதனால், அவர் தரவரிசையில் 26-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேபோல், மற்றொரு இந்திய வீரராக திவ்யான்ஷ் சிங் பன்வார் முறையே 102.7, 103.7, 103.6, 104.6,104.6, 103.6 என மொத்தம் 622.8 புள்ளிகளை பெற்றார். 

இதனால், தரவரிசையில் 32-வது இடத்தை பெற்று அவரும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
 

Share this story