இந்திய வீரர்களை சீண்டியதால், வந்தது பெரிய பாதிப்பு : முன்னாள் கேப்டன்

By 
The big impact came from scolding the Indian players the former captain

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன.

3-வது டெஸ்ட் :

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

3-வது டெஸ்ட் போட்டி, வருகிற 25-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு கட்டத்தில் தோல்வி நிலையை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. 

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அதில் இருந்து மீண்டு ரன்களை குவித்தும், சிறப்பான பந்து வீச்சின் மூலமும் வெற்றியை பெற்றது.

அடிபட்ட புலிபோல் :

இந்நிலையில், 2-வது டெஸ்ட் தொடர்பாக, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ரோஸ் கூறியதாவது :

இந்தியாவின் 2-வது இன்னிங்சில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், பின்கள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

இந்திய வீரர்களை உசுப்பேற்றியதால், அவர்கள் அடிபட்ட புலிபோல் விளையாடினார்கள். சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது.

இந்த 5 நாள் ஆட்டமும் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமே. இந்திய வீரர்களை அவர்கள் சீண்டியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். 

இங்கிலாந்து அணியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில், மாற்றம் மிகவும் அவசியம் ஆகும்' என்றார்.
*

Share this story