இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் :
அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா
Nov 15, 2021, 17:30 IST
By
அர்ஜூனா விருது பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கீதா ரெய்னா கூறியதாவது :
எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ஜனாதிபதியிடமிருந்து நான் விருதைப் பெற்றபோது, நம் நாட்டில் மிகக் குறைவானவர்களே இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
பல வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். எனக்கும் எனது பெற்றோருக்கும் இதுபோன்ற பெருமையான தருணங்களை உறுதி செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மதிப்புமிக்க விருதை வென்றது ஒரு பெரிய கவுரவம், அதிர்ஷ்டவசமாக நானும் விழாவில் கலந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவுக்காக, அதிக விருதுகளை வெல்ல இது எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும்.
மேலும், இளைஞர்களை அதிக ஈடுபாட்டுடன் விளையாட, இந்த விருதுகள் ஈர்க்கும்' என்றார்.
*