இழந்த மானத்தை மீட்போம், மீண்டும் புதிய சக்தியாக வருவோம்: இங்கிலாந்து கேப்டன் சூளுரை..

By 
joss

உலக கோப்பையில் இழந்த மானத்தை தாங்கள் மீட்டு எடுப்போம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 t20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி  மேற்கிந்திய தீவுகளுடன் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாஸ் பட்லர்..

புதிய தொடக்கத்தை எண்ணி நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். எங்களுடைய புதிய அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வீரர்கள் எல்லாம் தங்களுடைய வாய்ப்பு நோக்கி காத்திருக்கிறார்கள். எங்கள் அணியில் இருக்கும் சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவாக விளையாடுவதில்லை.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் நிச்சயம் இருக்கிறது. இதனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிதல்ல.எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புதிய தொடக்க வீரராக பில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

2019 உலகக்கோப்பை தொடரின் போது நான் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆச்சரிடம் இதைதான் சொன்னேன். இந்த சூப்பர் ஓவரில் நாம் தோல்வி அடைந்தாலும் அது உங்களை யார் என்று விவரிக்காது என்றேன். அதை தான் இப்போதும் சொல்கிறேன். உலககோப்பை தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் அது யார் என்று எங்களை விவரிக்காது.

கிரிக்கெட் குறித்து நல்ல கண்ணோட்டம் எனக்கு இருக்கிறது. என் வீட்டில் குழந்தைகள் நான் உலக கோப்பையில் அடைந்த தோல்வி குறித்து எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஏமாற்றம் இருக்கலாம், ஆனால், அடுத்த சவாலை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று பட்லர் கூறியுள்ளார்.
 

Share this story