வாய்க்குள் மறைத்து வைத்த 1 கிலோ தங்கம் : அதிகாரிகள் பறிமுதல்

By 
1 kg of gold hidden in the mouth authorities confiscated

டெல்லி விமான நிலையத்திற்கு வாயில் மறைத்து வைத்து, எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில், வாயினுள் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

* கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், பொதுமக்களை ஒருமையில் பேசவோ, அழைக்கக் கூடாது. 
மக்களிடம் பேசும்போது, எடீ... மற்றும் வாடி... போடி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

மாவட்ட சிறப்புப் பிரிவு பொதுமக்களுடன் போலீசாரின் நடத்தை குறித்து, உன்னிப்பாகக் கண்காணிக்கும் மற்றும் ஒழுக்கமற்ற நடத்தை இருக்கும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் உத்தரவிட்டுள்ளார். 

Share this story