33 மீனவர்கள் கைது, விசைப்படகுகள் பறிமுதல்
Mar 9, 2022, 17:57 IST
By
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, குமரி மீனவர்கள் 33 பேரை சீசெல்சு நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.