கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை-81 பேருக்கு சிறை : பாக். நீதிமன்றம் தீர்ப்பு

By 
court2

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய இலங்கையைச்  பிரியந்த குமார, கடந்த டிசம்பர் மாதம் கொடூரமாக கொல்லப்பட்டார். 

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக கூறி, 800-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தொழிற்சாலையில் இருந்து பிரியந்தா குமாரவை வெளியே இழுத்து கடுமையாக தாக்கிக் கொலை செய்ததுடன், அவரது உடலை எரித்துள்ளனர்.

இரு நாடுகளிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் 100-க்கும் மேற்பட்டோர் உடனே விடுவிக்கப்பட்டனர். 

மற்றவர்கள் மீது லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 81 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பை இலங்கை வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது. 

Share this story