சென்னை வாழ் மக்களுக்கு, மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..

By 
corporation2

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சி அறிவித்துள்ளபடி நாளை முதல் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வர உள்ளனர். அவர்களிடம் பழைய துணிகள், டயர்களை பொதுமக்கள் ஒப்படைக்கலாம். இதற்காக மாநகராட்சி விழிப்புணர்வு பிரசாரத்தையும் இன்று (சனிக்கிழமை) தொடங்கி உள்ளது.

பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 

Share this story