கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் 
 

By 
corona1

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

இன்று (நேற்று) உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில், #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். 

அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 3 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனால், அவரது உடலில் கொரோனா பாதிப்பின் அளவும் குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.
*

Share this story