சீன வீரர்களை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள்; கடும் மோதல் : எல்லையில் நடந்தது என்ன?

By 
army6

எல்லையில் அத்துமீறி முன்னேறி வந்த 200 சீன வீரர்களை 50 வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் சீன படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர், இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

எல்லையில் சீன வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வருவது குறித்து முதல் அடுக்கு படையினர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, 2-ம் அடுக்கில் இருந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 30 நிமிடங்களில் 2-ம் அடுக்கு வீரர்கள் மோதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். 200 சீன வீரர்களின் எண்ணிக்கையை விட இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளனர்.

சீன வீரர்கள் துப்பாக்கி கொண்டு வராமல் ஆணி பொறுத்திய இரும்பு கம்பி, மரக்கட்டை கொண்டுவந்த நிலையில், கூடுதலாக விரைந்த இந்திய படைகள் சீனா வைத்திருந்த ஆயுதங்களை விட அதிக ஆயுதங்கள் வைத்திருந்தன. (இந்திய படையினர் கொண்டு சென்ற ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை).

ஏற்கனவே இருந்த 50 வீரர்களுடன் கூடுதலாக விரைந்த 2-ம் அடுக்கு படையினரும் இணைந்துகொண்டனர். 200 சீன வீரர்கள் இருந்த நிலையில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் இருந்துள்ளனர். இரு தரப்பு வீரர்களும் கற்களால் தாக்கியதுடன், ஆயுதங்கள் இன்றி கையால் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே காயம் ஏற்பட்டுள்ளது.

சீன வீரர்களுடனான நேரடி மோதலில், இந்திய வீரர்கள் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மோதலில் இந்திய வீரர்கள் 15 பேர் காயமடைந்த நிலையில் சீன வீரர்கள் அதிக அளவில் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 வீரர்களாக இருந்த இந்திய படையில் 15 நிமிடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிந்ததால் சீன படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய வீரர்கள் அதிக அளவில் இருந்ததால், மோதலில் சீன வீரர்கள் அதிகமானோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தையடுத்து சீன வீரர்கள் உடனடியாக பின்வாங்கியுள்ளனர்.

இந்த மோதலையடுத்து அப்பகுதியில் இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் எல்லைப்பகுதி பழைய மற்றும் சுமூக நிலைக்கு திரும்பியுள்ளனது. பின்னர், இந்திய - சீன வீரர்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்பினர்.

மோதல் நடைபெற்ற பகுதியில், சமீபத்தில் இந்திய தரப்பில் ராணுவ படைப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நாங்கள் தான் வலிமை மிக்கவர்கள் என்ற மன உறுதி வலிமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, சீன படையினர் எல்லைக்குள் முன்னேறி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இந்தியா - சீனா இடையே எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில் சர்ச்சை உள்ளது. இரு தரப்பும் தங்கள் எல்லையை வெவ்வேறு பகுதிகளாக வரையறுத்துள்ளதால், இந்த சர்ச்சை நிலவி வருகிறது. இதன் காரணமாக இப்பகுதில் இரு நாட்டு படைகளும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story