எனது 60-வது பிறந்த நாளில், ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்கிறேன் : கவுதம் அதானி மகிழ்ச்சி

By 
adani

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு இன்று வெள்ளிக்கிழமை 60-வது பிறந்த நாள் ஆகும். 

இதையொட்டி, அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். 

சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளுக்கு, இந்த நன்கொடை வழங்கப்படுகிறது. 

அதானி அறக்கட்டளை சார்பில், இந்த பணிகள் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

'கவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் கவுதம் அதானியின் 60-வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க உறுதிபூண்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்கொடையாக வழங்கும் ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் ஆகும். இந்திய கார்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். 

இதன் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பெப்பட் போன்ற உலக கோடீஸ்வரர்களின் வரிசையில், கவுதம் அதானியும் இடம் பெற்றுள்ளார்.
*

Share this story