குற்றங்கள் நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் : புதிய டிஜிபி சைலேந்திர பாபு

By 
Action must be taken to prevent crimes New DGP Silent Babu

 
மக்களிடம், போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்.
தமிழகத்தில், குற்றங்கள் நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

புதிய டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, திரிபாதி வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது :

* காவல்துறையின் தலைமைப் பொறுப்பை வகிப்பது அரிய சந்தர்ப்பம்.

* தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மக்களிடம், போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்.

* அரிய வாய்ப்பு தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

Share this story