புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? : சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

By 
supreme3

சிபிஐ, அமலாக்க துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 5 ந்தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. தி.மு.க., ரஷ்டிரீய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிங்வி ஆஜரானார்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்த மனு ஏப்ரல் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி உள்ளார்.
 

Share this story