'சென்னைவாழ் மக்களின் கவனத்திற்கு' : 31-ம் தேதி கடைசி நாள்.. மாநகராட்சி எச்சரிக்கை

By 
chennai cor

* சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியினை செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மேலும், நீண்ட நாட்களாக செலுத்தாத இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால், 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story