மசூதியில் குண்டுவெடிப்பு : 17 பேர் பலி..
Jan 30, 2023, 17:58 IST
By
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.
பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது. இந்நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்